புதுக்கோட்டை மாவட்டம் வடக்காட்டு திலீபன் திடலில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் " இந்த மாவட்டம் தற்போது புதுக்கோட்டை என்பதை விட புலிக்கோட்டை என்றும், வடகாடு என்பதை விட வவுனியா காடாகவும் மாறியிருக்கிறது.
தன்மீதான பற்றை விட தமிழினத்தின் மீதான பற்று தான் இதற்கு காரணம். இந்த மாவட்டத்தில் எங்களது இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முத்துக்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். நான் எங்கு பேசினாலும் எனக்கு பின்னால் பாதுகாப்பாக நின்றவர் முத்துக்குமார்.
முத்துக்குமாரை எங்களிடமிருந்து பறித்த அந்த கூட்டத்தை நான் விடமாட்டேன். பழி தீர்ப்பேன். இது தான் எங்கள் லட்சியத்தின் தமிழீழ விடுதலைக்கான அடித்தளம்.
காலத்தின் கட்டாயம். இனி தமிழன் மீது கைவைக்க எவனும் அஞ்சவேண்டும். முத்துக்குமார் கொலையில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. இந்த கொலையை யார் செய்தது என்று எங்களுககு தெரியும்.
உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை விடமாட்டோம். இன்னும் 20 நாளைக்குள் குற்றவாளியை கைது செய்வதாக காவல் துறை சொல்லியிருக்கிறது. அது வரை தான் கெடு.
அதற்கு மேல் கொலையாளிகள் கைதாகவில்லை என்றால், அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். முத்துக்குமார் படத்துடன் தமிழக வீதிகளில் போராடுவோம். எதிர்த்துப் பாருங்கள். அப்போது தெரியும்.
தமிழகத்தில் இந்த முறை தோற்பவர்களும், ஜெயிப்பவர்களும் இனி எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழ்நாடு தமிழனுக்கானது. தமிழன் தான் ஆளமுடியும்.
காங்கிரசை தமிழ்மண்ணில் இருந்து அகற்றும் வரை ஓய மாட்டோம். அதில் உறுதியாகவும், கவனமாகவும் இருப்போம். தி.முக. தற்போது எடுத்த முடிவை ஒராண்டிற்கு முன்னாள் எடுத்திருந்தால் தமிழினம் காக்கப்பட்டிருக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment